பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
புயலால் பார்டாஸில் நான்கு நாட்களாக சிக்கி தவித்து வந்த இந்திய அணி நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று (ஜூன் 4) சரியாக ஆறு மணிக்கு டெல்லி விமான நிலையத்திற்கு உலக கோப்பையுடன் தாயகம் திரும்பினர். டெல்லி விமான நிலையத்தில் இந்திய ரசிகர்கள் உற்சாகமாக மேல தாளங்களுடன் வரவேற்றனர்.
பின்னர், உலகக் கோப்பையை பிரதமரிடம் கொடுத்து வீரர்கள் வாழ்த்துப் பெற்றனர். தொடர்ந்து, மோடி அளித்த விருந்தில் வீரர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து மும்பை செல்லும் இந்திய வீரர்கள் திறந்தவெளி வாகனத்தில் ரசிகர்களுக்கு மத்தியில் பேரணியாக செல்லவுள்ளனர்.