சினிமா
காலை இழந்த கன்னட நடிகர்! விபத்தால் பரிதாபம்!
.கன்னட திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் எஸ் .ஏ .ஸ்ரீநிவாசன் .இவரது மகன் நடிகரான சூரஜ் குமார் .இவர் திரையுலகிற்கு வந்ததற்கு பிறகு தனது பெயரை துருவன் என்று மாற்றிக்கொண்டார். இதனைத்தொடர்ந்து , நடிகர் சூரஜ் குமார் கடந்த சனிக்கிழமை அவரது இருசக்கரவாகனத்தில் மைசூரில் இருந்து ஊட்டிக்கு சென்றுள்ளார்.
இதற்கிடையில் டிராக்டர் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிரில் வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த சூரஜ் குமார் , மைசூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.இவரின் உயிரை காப்பாறுவதற்காக மருத்துவர்கள் அவரின் வலது காலை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியதாக தகவல் வெளிவந்துள்ளது .இவர் அடுத்ததாக நடிகை பிரியாவாரியருடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login