சிக்கிய கள்ளச்சாராய ஊறல் ! தப்பியோடிய குற்றவாளி !

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை, சேர்வராயன் மலை ஆகிய மலைப்பகுதிகளில் , சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையிலான குழு கள்ள சாராயம் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.அதன்படி தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்த காவல் துறையினர் , விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம், நாகலூர் மலைப்பகுதியில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர் அப்பொழுது குப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கள்ள சாராயம் காய்ச்ச ஊறல் அமைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் அந்த விவசாய தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர் அப்பொழுது நிலத்துக்கு அடியில் மூன்று பேரல்களில் 500 லிட்டர் கள்ள சாராயம் ஊரலளிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அதனை அதே பகுதியில் கீழே கொட்டி அளித்ததுடன் பொருட்களையும் உடைத்து எறிந்தனர். தப்பி ஓடிய குப்பன் என்பவரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News