Connect with us

Raj News Tamil

மூடப்படாமல் இருந்த மழைநீர் கால்வாயில் விழுந்த முதியவர் உயிரிழப்பு!

தமிழகம்

மூடப்படாமல் இருந்த மழைநீர் கால்வாயில் விழுந்த முதியவர் உயிரிழப்பு!

சென்னை நங்கநல்லூரில் மூடப்படாமல் இருந்த மழைநீர் கால்வாயில் விழுந்த முதியவர் உயிரிழப்பு. இதனால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயராஜ் (84) என்பவர் வழக்கம் போல் காலையில் பால் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் மழை நீர் வடிகால்வாய் திறந்து இருந்த நிலையில் முதியவர் இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி மழை நீர் வடிகால்வாய் பள்ளித்தில் விழுந்தார். அவர் தலையில் பலமாக அடிப்பட்டதை அடுத்து ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். நங்கநல்லூரில் மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வரும் பகுதிகளில் தடுப்புகள் இல்லாமல் இருப்பதே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாக கூறப்படுகிறது. முறையான பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top