சினிமா
விஜய் பட இயக்குநருக்கு நன்றி கூறும் தனுஷ் ரசிகர்கள்!
திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களுக்கு பிறகு, வாத்தி திரைப்படத்தின் தனுஷ் நடித்துள்ளார். இந்த படம் நாளை வெளியாக உள்ளது. கல்வித்துறையில் நடக்கும் ஊழல்களை சுட்டிக் காட்டும் விதமாக அமைந்துள்ள இந்த திரைப்படம், நல்ல வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த படம் குறித்து, வாரிசு படத்தின் இயக்குநர் வம்சி பைடிபள்ளி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனுஷின் மிகச்சிறந்த நடிப்பில் உருவாகியுள்ள இன்னொரு திரைப்படம் வாத்தி என்றும், எமோஷனல் காட்சிகளில் அவர் சிறப்பாக நடித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்த திரைப்படம் நல்ல வசூலை பெறும் என்று குறிப்பிட்ட அவர், இந்த படத்தின் மூலம், எடிட்டருக்கான தேசிய விருதை நவீன் நூலி பெறுவார் என்றும் பாராட்டியுள்ளார். இவரது பதிவை பார்த்த தனுஷ் ரசிகர்கள் வம்சிக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment Login