தமிழகம்
மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை!
தமிழகத்தில் மேல்முறையீடு செய்த 1.48 லட்சம் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை கிடைக்கும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.
அதில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், 1.15 கோடி மகளிர் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார்கள். அத்துடன் உரிமைத் தொகை கோரி, மேல்முறையீடு செய்யப்பட்டவர்களில் 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர் 30 நாள்களுக்குள் இ-சேவை மூலமாக மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)