பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்த விஜய்.. சிக்கிய விக்ரம்..

தளபதி விஜயும், சீயான் விக்ரமும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரில், நடிகர் விஜய்-க்கு ஒரு கண்டம் வர இருந்தது. ஆனால், அந்த கண்டத்தில் அவர் சிக்காமல், அவருக்கு பதிலாக, விக்ரம் சிக்கியுள்ளார். அது என்ன கண்டம், எப்படி அவர் சிக்கினார் என்பதை தற்போது பார்க்கலாம்.

பொதுவாக ஒரு நடிகர் நடிப்பதாக இருந்த சில திரைப்படங்கள், இன்னொரு நடிகர் நடித்து பெரிய ஹிட்டான கதைகளை நாம் கேட்டிருப்போம். அதற்கு எடுத்துக்காட்டாக, கஜினி, உன்னை நினைத்து, நான் கடவுள் ஆகிய படங்களை சொல்லலாம்.

ஆனால், சில நேரங்களில், இதற்கு எதிர் மாறாக, ஒரு நடிகர் நடிப்பதாக இருந்த சில திரைப்படங்கள், இன்னொரு நடிகர் நடித்து மிகப்பெரிய தோல்வி அடைந்திருக்கும். அப்படியான திரைப்படம் தான் பத்து என்றதுக்குள்ள.

இந்த படத்தின் கதையை, பல வருடங்களுக்கு முன்பே தயார் செய்து வைத்திருந்த இயக்குநர் விஜய் மில்டன், நடிகர் விஜயிடம், ஓகே வாங்கி இருந்தாராம். ஆனால், சில காரணங்களால், அந்த திரைப்படம் டேக் ஆஃப் ஆகாமல், ட்ராப் ஆகிவிட்டது.

பின்னர், சில வருடங்கள் கழித்து, ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், விக்ரம் – சமந்தா ஆகியோர் நடிப்பில், அப்படம் தயாராகி, தோல்வி படமாக மாறியது. இதனை அறிந்த ரசிகர்கள், மிகப்பெரிய தோல்வி படத்தில் இருந்து விஜய் தப்பித்துவிட்டார் என்றும், நடிகர் விக்ரம் சிக்கிக் கொண்டார் என்றும், கருத்துக் கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News