Connect with us

Raj News Tamil

நிலச்சரிவில் 10 பேர் உயிரிழப்பு; 100-க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு!

இந்தியா

நிலச்சரிவில் 10 பேர் உயிரிழப்பு; 100-க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு!

மஹாராஷ்டிராவில் ராய்கட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் உயிரிழந்தனர். இதில் 100 பேர் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ராய்கட் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் பேர் வசிக்கும் பகுதியான இர்சல்வாடி என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் இருந்த 30க்கும் மேற்பட்ட வீடுகள் மீது மண் மற்றும் பாறைகள் விழுந்தன.

தகவல் அறிந்ததும் 150 மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் 500 மீட்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை ஆய்வு செய்தார்.

மீட்பு பணிக்கு உதவுவதற்காக ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் 100க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

More in இந்தியா

To Top