Connect with us

Raj News Tamil

நவராத்திரி விழாவில் நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு!

இந்தியா

நவராத்திரி விழாவில் நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு!

நவராத்திரி விழாவில் நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்துக்கள் மத்தியில் நவராத்திரி விழா சிறப்பு வாய்ந்தது. இந்த நாள் நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை பக்தர்கள் வழிபடுகின்றனர். கர்பா நடனத்தைப் பாரம்பரிய உடைகளுடன் ஆண்களும், பெண்களும் விடியும் வரை இசைக்கு ஏற்ப ஆடுவார்கள்.

இந்நிலையில் குஜராத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தில் கர்பா நடமாடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த 10 பேரும் இளவயது மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

More in இந்தியா

To Top