தமிழகம்
1,00,008 வடை மாலையில் பக்தர்களுக்கு காட்சியளித்த நாமக்கல் ஆஞ்சநேயர்!
மார்கழி திங்கள் அமாவாசையன்று அனுமன் அவதரித்தார். அந்த நாளை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாமக்கல் நகரின் மையப்பகுதியான கோட்டை சாலையில் அமைந்துள்ள 18 அடி உயர விஷ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயத்தியான இன்று 1,00,008 வடை மாலைகள் சாத்தப்பட்டது, சரியாக அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறப்பட்டு வடைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
காலை 11 மணி வரை வடை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் ஆஞ்சநேயருக்கு காலை 11 மணிக்கு பிறகு பால் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.
பின் மதியம் 1 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஆஞ்சநேயருக்கு மாலையாக சாத்தப்பட்ட 1,00,008 வடைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபட உள்ளது.
வடைகள் தயாரிக்கும் பணியில் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த 35 பேர் ஈடுபட்டனர். 2050 கிலோ உளுந்த மாவு, 600 லிட்டர் நல்லெண்ணெய், 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 125 கிலோ உப்பு ஆகியவற்றை கொண்டு வடை தயாரிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.