Connect with us

Raj News Tamil

இறைவன் படத்தில் முக்கிய மாற்றம்! கண் போனதுக்கு பிறகு சூர்ய நமஸ்காரம் எதுக்கு?

சினிமா

இறைவன் படத்தில் முக்கிய மாற்றம்! கண் போனதுக்கு பிறகு சூர்ய நமஸ்காரம் எதுக்கு?

ஐ.அகமது இயக்கத்தில், ஜெயம் ரவி, நயன்தாரா ஆகியோர் நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் இறைவன்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த திரைப்படம், ரிலீஸ்-க்கு பிறகு, மோசமான விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் சந்தித்தது. இதனால், படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், இறைவன் படக்குழுவினர், இப்படத்தில் புதிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர்.

அதாவது, நேற்று மதிய காட்சிகள் முதல், இப்படத்தில் உள்ள 14 நிமிட காட்சிகளை நீக்கி, திரையரங்குகளில் திரையிட்டுள்ளனர்.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், கண் போனதுக்கு பிறகு சூர்ய நமஸ்காரம் எதற்கு என்று? கிண்டலாக பதிவு வெளியிட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top