சென்னை மெரினா லூப் சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் எடுக்குமாறு கூறினர்.
உடனே காரில் இருந்து வெளியே வந்த சந்திர மோகன் மற்றும் அவரது தோழி தன லெட்சுமியும் காவல் துறையினரை ஆபாசமாக திட்டி தீர்த்து விட்டு அந்த இடத்தை விட்டு காரில் தப்பிச் சென்றனர்.
இந்நிலையில் அவர்கள் காவல் துறையினரை ஆபாசமாக திட்டிய வீடியோ காட்டுத்தீ போல சமூகவலைதளங்களில் பரவ காவல் துறையினர் அவர்கள் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நேற்று காலை முதல் மூன்று தனிப்படை அமைத்து தேடி வந்தனர். நேற்று (அக்.21) மாலையில் வேளச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் இருவரும் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் நேற்று (அக்.21) இரவு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி குடியிருப்பில் நீதிபதி முன்பு சந்திர மோகன் மற்றும் அவரது கள்ளக் காதலி தனலெட்சுமி ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் பதினைந்து நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.