அமுதம் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் 15 மளிகைப் பொருட்கள் விற்பனை!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் 499 ரூபாய்க்கு 15 மளிகை பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் மளிகை தொகுப்பு விற்பனை திட்டத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள அமுதம் மக்கள் அங்காடியில் இந்த திட்டத்தை இன்று (அக்.22) காலை அமைச்சர் சக்ரபாணி துவக்கி வைத்தார்.

பண்டிகை காலங்களை கவனத்தில் கொண்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் 15 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் மளிகை தொகுப்பு திட்டத்தில் மஞ்சள் தூள் 50 கிராம், உப்பு 1 கிலோ,கடுகு 125 கிராம், சீரகம் 100 கிராம், வெந்தயம்100 கிராம், சோம்பு 50 கிராம், மிளகு 50 கிராம், மிளகாய் 250 கிராம், தனியா 500 கிராம், புளி 500 கிராம் உளுத்தம் பருப்பு 500 கிராம், கடலைப்பருப்பு 200 கிராம்,பாசிப்பருப்பு 200 கிராம்,வறு கடலை 200 கிராம், பெருங்காயத்தூள் 15 கிராம் ஆகியவை தொகுப்பில் வைக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக இன்று (அக்.22) சென்னையில் கோபாலபுரம் உட்பட 10 அமுதம் நியாய விலை கடைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது,

தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் மூலமாக இந்த 15 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கோபாலபுரம், அண்ணா நகர் பகுதியில் உள்ள அமுதம் அங்காடி, 10 அமுதம் நியாயவிலைக் கடைகளில் முதற்கட்டமாக இந்த விற்பனை நடக்கும்.

சென்னையில் அமுதம் அங்காடியில் 10 இடங்களில் 15 வகையான மளிகைப் பொருள்கள் 499 ரூ. க்கு மளிகைத் தொகுப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

600 ரூபாய்க்கு மேல் உள்ள மளிகைத் தொகுப்புகளை 499 ரூ.க்கு விற்கிறோம்.

தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி, பருப்பு,பாமாயில், சர்க்கரை, கோதுமை என அனைத்தும் தரமாக வழங்கப்படுகிறது. என்று தெரித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News