சித்தியின் மீது பாலியல் ஆசை.. 16 வயது சிறுவன் செய்த அதிர வைக்கும் செயல்..

கர்நாடக மாநிலத்தில் உள்ள உப்பினங்கடி பகுதியை சேர்ந்த 37 வயது பெண், தனது கணவருடன் வசித்து வந்தார். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, தனது தாயின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அங்கு வசித்து வந்த இந்த பெண்ணின் மீது, இவரது அக்காவின் 16 வயது மகனுக்கு, பாலியல் ரீதியிலான ஆசை இருந்துள்ளது. இதனை தீர்த்துக் கொள்ள முடிவு செய்த அச்சிறுவன், சம்பவத்தன்று, அப்பெண்ணிடம் அத்துமீறி நடந்துள்ளான்.

ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், பெற்றோர்களிடம் இதுகுறித்து கூறுவேன் என்றும் தெரிவித்திருக்கிறார். இதனால் அச்சம் அடைந்த அச்சிறுவன், தனது சித்தியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளான்.

பின்னர், காவல்துறையினரின் விசாரணைக்கு பிறகு, நடந்த அனைத்தையும், வாக்குமூலமாக தெரிவித்துள்ளான். பாலியல் இச்சை காரணமாக, சிறுவன் தனது சித்தியை கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News