Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

“ஒழுங்கா நான் சொல்றத செய்” – சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த நபர்!

தமிழகம்

“ஒழுங்கா நான் சொல்றத செய்” – சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த நபர்!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பொம்மதாத்தனூர் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, அரசு பள்ளியில், 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், கடந்த 8-ஆம் தேதி அன்று வீட்டில் தனியாக இருந்தபோது, அதே ஊரை சேர்ந்த சக்கரலப்பா என்ற நபர், வீட்டிற்குள் நுழைந்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால், கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால், சக்கரலப்பா செய்த கொடுமையை யாரிடமும் சொல்லாமல், அந்த பெண் மௌனம் காத்து வந்துள்ளார்.

இதற்கிடையே, அந்த பெண் தனியாக இருந்தபோது, வீட்டிற்குள் சக்கரலப்பா சென்றதையும், நீண்ட நேரம் கழித்து வெளியே வந்ததையும், பக்கத்தை வீட்டை சேர்ந்த சிறுவன் பார்த்துவிட்டு, சிறுமியின் பெற்றோரிடம் கூறியுள்ளான்.

அவர்கள் அதிர்ச்சி அடைந்து, இதுகுறித்து கேட்டதற்கு, தனக்கு நடந்த கொடுமைகளை அந்த பெண் கூறியுள்ளார். இதையடுத்து, 16 வயது சிறுமியின் பெற்றோர், காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், தலைமறைவாக உள்ள சக்கரலப்பாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top