239 மூட்டைகளில் 1,658 கிலோ குட்கா பறிமுதல்!

போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 239 மூட்டைகளில் 1658 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த குட்கா மூட்டைகள் சாலையில் சிதறியது வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர்கள் தப்பித்து சென்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த பெருமாநல்லூர் போலீசார் தீவிர‌ வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 239 மூட்டைகளில் 1658 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் பெங்களூரில் இருந்து அவிநாசிக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராஜஸ்தானை சேர்ந்த தினேஷ்குமார் (21), ராஜேஷ்குமார் (23), கேசவ்ராம்(26), மாதரம் (26), துதாரம்(24), கோபரம்(35), ஓப்ரம் (30) என்ற ஏழு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News