தமிழகம்
1666 புதிய பேருந்துகள் வாங்க முடிவு – தமிழக அரசு அதிரடி
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படாமல், பழைய பேருந்துகள் மறுசீரமைத்து பயன்படுத்தி வருவதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வந்தது.
மதுரை, திருநெல்வேலி போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் பேருந்துகள் பெரும்பாலும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் நான்கு வருடங்களுக்குப் பிறகு அரசு போக்குவரத்து கழகத்திற்கு 1666 புதிய பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் போக்குவரத்து கழகத்திற்கு 367 பேருந்துகளும், மதுரை போக்குவரத்து கழகத்திற்கு 350 பேருந்துகளும், விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு 344 பேருந்துகளும், கோவை போக்குவரத்து கழகத்திற்கு 263 பேருந்துகளும், திருநெல்வேலி போக்குவரத்து கழகத்திற்கு 242 பேருந்துகளும், சேலம் போக்குவரத்து கழகத்திற்கு 84 பேருந்துகளும் வாங்குவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது.