Connect with us

Raj News Tamil

சென்னையில் இன்று தொடங்குகிறது 17-வது ஐபிஎல்: ஆர்சிபி அணியுடன் சிஎஸ்கே மோதல்!

விளையாட்டு

சென்னையில் இன்று தொடங்குகிறது 17-வது ஐபிஎல்: ஆர்சிபி அணியுடன் சிஎஸ்கே மோதல்!

17-வது ஐபிஎல் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமான முறையில் இன்று மாலை தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றது.

முன்னதாக மாலை 6.30 மணிக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் அக்சய்குமார், டைகர் ஷெராப், பாடகர் சோனுநிகாம் ஆகியோர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் போட்டிகள் தொடங்குகிறது.

அதனை தொடர்ந்து சிஎஸ்கே ஆர்சிபி அணிகள் இடையேயான போட்டி தொடங்குகிறது. நடப்பு ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடப்பு சாம்பியன் சென்னை அணியில் ரச்சின் ரகானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ஜடேஜா, தீபக் சாகர், ஷர்துல் தாகூர் மகேஷ் தீக்‌ஷனா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோருடன் பலம் மிகுந்த அணியாக விளங்குகிறது.

டூபிளசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணியில் விராட் கோலி, கேமரூன் கிரீன், ரஜத் படிதார், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், மயங்க் டாகர், அல்சாரி ஜோசப், முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் நட்சத்திர வீரர்களான தோனி மற்றும் விராட் கோலி விளையாடும் போட்டி என்பதால் இப்போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தோனி மற்றும் விராட்கோலி ஆகியோரின் ஆட்டத்தை பார்ப்பதற்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்து உள்ளனர்.

More in விளையாட்டு

To Top