Connect with us

Raj News Tamil

ஒரே நாளில் மின்னல் தாக்கி 18 பேர் உயிரிழப்பு!

இந்தியா

ஒரே நாளில் மின்னல் தாக்கி 18 பேர் உயிரிழப்பு!

பிகார் மாநிலம் முழுவதும் மின்னல் தாக்கியத்தில் ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநிலத்தில் பரவலான இடங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் பாய்ந்து ரோஹ்தாஸ் மாவட்டத்தில் 5 பேரும், அர்வாலில் 4, சரணில் 3, அவுரங்காபாத் மற்றும் கிழக்கு சம்பரனில் தலா இருவர், பாங்கா மற்றும் வைஷாலி ஆகிய மாவட்டத்தில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல்வா் நிதீஷ் குமார், அவா்களுக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மோசமான வானிலை நிலவுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அவா் அறிவுறுத்தியுள்ளார்.

More in இந்தியா

To Top