Connect with us

Raj News Tamil

கார் ஓட்டிப் பழகிய 2 சிறுவர்கள் சாலை விபத்தில் பலி..!!

தமிழகம்

கார் ஓட்டிப் பழகிய 2 சிறுவர்கள் சாலை விபத்தில் பலி..!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த கபிலர்மலை பெரியமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் (14). இவர் நேற்று இரவு 11 மணி அளவில் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் லோகேஷ் (17) என்பவருடன் ஆம்னி கார் ஓட்டி பழகி உள்ளார்.

பரமத்தி வேலூர் பைபாஸ் சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மற்றொரு கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டிய சுதர்சன் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த ஜேடர்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top