Connect with us

Raj News Tamil

நடுரோட்டில் அடித்துக் கொண்ட பள்ளி மாணவர்கள்.. 5 பேர் காயம்.. 6 பேர் கைது..

இந்தியா

நடுரோட்டில் அடித்துக் கொண்ட பள்ளி மாணவர்கள்.. 5 பேர் காயம்.. 6 பேர் கைது..

தலைநகர் டெல்லியில் உள்ள கரவால் நகரில், அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி மாணவர்களுக்கும், சர்வோதயா பால் வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கும் இடையே, முன்விரோதம் காரணமாக, தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறு முற்றிய நிலையில், இருதரப்பு மாணவர்களும், ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்திக் கொண்டனர். இதில், படுகாயம் அடைந்த 5 மாணவர்கள், GTB மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பவத்தில் தொடர்புடைய 6 மாணவர்களை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top