அரசு மதுபானம்.. குடித்த சில நிமிடங்களில் 2 பேர் பலி.. அதிர்ச்சியில் உறவினர்கள்..

மயிலாடுதுறை அருகே, அரசு மதுபானம் குடித்த சில மணி நேரத்தில், இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள தத்தங்குடி பகுதியை சேர்ந்தவர் பழனிகுருநாதன். கொள்ளம் பட்டறை நடத்தி வந்த இவரிடம், பூராசாமி என்ற நபர் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை பணி முடிந்த பிறகு, இருவரும் கொள்ளம் பட்டறையிலேயே மது அருந்தியுள்ளனர்.

மதுவை குடித்த சில நிமிடங்களில், இருவரும் மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், 2 பேரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், இரண்டு பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இரண்டு பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, அரசு மதுபானம் குடித்ததால் தான், இரண்டு பேரும் உயிரிழந்ததாக, அவர்களது உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News