Connect with us

Raj News Tamil

மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் பலி!

தமிழகம்

மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் பலி!

போதைக்காக சானிடைசரை மதுவில் கலந்து அருந்திய 2 பேர் உயிரிழந்தனர்.

கும்பகோணம் விருமாண்டி சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பால குரு (48), இவரும் கும்பகோணம் கருணைக் கொல்லை தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் சவுந்தர ராஜன் (43). பாலகுருவுக்கும், சவுந்தர் ராஜனுக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளன.

கூலித் தொழிலாளியான இவர்கள் தினந்தோறும் கும்பகோணம் சக்கரப்படித்துறையிலுள்ள காவேரி ஆற்றின் படித்துறையில் அமர்ந்து மது அருந்துவது வழக்கமாக கொண்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு மது அருந்தி உள்ளனர்.

பால குரு, சவுந்தர ராஜன், உயிரிழந்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 2 உடல்களை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காவல்துறை விசாரணை நடத்தியதில், போதைக்காக இருவரும் மதுவில் சானிடைசரை கலந்து அருந்தியுள்ளது தெரியவந்துள்ளது. இதேபோல் அவர்கள் இருவருடன் மது அருந்திய மற்ற 2 பேர் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in தமிழகம்

To Top