Connect with us

Raj News Tamil

போலீஸ் என்கவுண்டரில் 2 ரவுடிகள் பலி!

தமிழகம்

போலீஸ் என்கவுண்டரில் 2 ரவுடிகள் பலி!

சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வேகமாக வந்த கார் போலீசாரின் வாகன சோதனைக்கு நிற்காமல் சென்றது.

இதனை தொடர்ந்து அந்த காரை போலீசார் பின் தொடர்ந்து சென்ற நிலையில் காரில் இருந்த ரவுடிகள் இருவரும் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், தாக்குதலுக்கு பதிலடியாக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் சோட்டா வினாத், ரமேஸ் ஆகிய 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ரவுடிகள் தாக்கியதில் காயமடைந்த உதவி ஆய்வாளர் சிவகுருநாதன், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top