Connect with us

Raj News Tamil

2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

தமிழகம்

2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

பாடியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கொலை செய்த நபர்களை செங்குன்றம் தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் , திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே புதூர் மாரம்பேடு பகுதியில் பதுங்கியிருந்த முத்து சரவணன் (35), ஞாயிறு சதிஷ (27) ஆகியோரை தனிப்படை காவலர்கள் பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்ற போது ரவுடிகள் இருவரும் போலீசாரை தாக்கி தப்பிச் செல்ல முயன்றனர். இதையடுத்த போலீசார் இவருவரையும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். என்கவுன்ட்டரில் சம்பவ இடத்திலேயே ரவுடி முத்து சரவணன் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மற்றொரு ரவுடி சதீஷ், மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top