5 வயது பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்கள் கைது!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே வல்லாஞ்சேரி பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராசைய்யா (29) என்பவர் வல்லாஞ்சேரியில் தங்கி உடற்பயிற்ச்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

அதேபோல் கூடுவாஞ்சேரி அடுத்த நீலமங்களம் பகுதியைச் சேர்ந்த காயேஸ்குமார் (29) என்பவர் அதே பள்ளியில் மியுசிகல் டீச்சராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்கள் இருவரும் அதே பள்ளியில் LKG படிக்கும் 5 வயது சிறுமிக்கு ஆசிரியர்களான ராசைய்யா, மற்றும் காயேஸ்குமார் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களாக பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிறுமி பள்ளியில் ஆசிரியர்கள் தவராக நடந்ததை பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் ஆய்வாளர் மாலினி தலைமையிலான போலீசார் பள்ளி ஆசிரியர்களான ராசைய்யா, மற்றும் காயேஸ்குமார் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு இருவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News