2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

காஷ்மீரின் சோபியான் அல்ஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று மறைந்திருந்த பயங்கரவாதிகள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் மற்ற பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றன.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களிடம் இருந்து நவீன ரக ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News