Connect with us

Raj News Tamil

2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

இந்தியா

2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாதுகாப்புப் படையினர் 2 பயங்கரவாதிகளை நேற்று சுட்டுக் கொன்றனர்.

இதுதொடா்பாக காஷ்மீா் மண்டல காவல் துறை தெரிவித்ததாவது:

ஜம்மு-காஷ்மீரின் உரி செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய பகுதியில் புதன்கிழமை ஆள்நடமாட்டம் தென்பட்டது. இதையடுத்து பாதுகாப்புப் படைகள் உஷார்படுத்தப்பட்டன. அங்கு பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

இந்த மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன என்று காவல் துறை தெரிவித்தது.

More in இந்தியா

To Top