வாரத்தில் 3 நாட்கள் மட்டும்.. 2 மனைவிகள் எடுத்த அதிரடி முடிவு.. கணவர் என்ன செஞ்சாரு தெரியுமா?

ஒரு திருமணம் செய்யவே முடியாமல், 90-ஸ் கிட்ஸ்கள் கஷ்டப்பட்டு வரும் நிலையில், ஒருவர் 2 திருமணங்கள் செய்து, தனது இரண்டு மனைவிகளுடனும், வித்தியாசமான முறையில் குடித்தனம் நடத்தி வரும் சம்பவம் ஒன்று, உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தை சேர்ந்த நபர், ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணமாகிய சில நாட்களுக்கு பிறகு தான், தனது கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி, 3 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, காவல்நிலையத்தில் இருந்த 2 மனைவிகளும், கணவர் என்னுடன் தான் வாழ வேண்டும் என்று பெரும் கலவரத்தையே நடத்திவிட்டனர். இறுதியில் நடந்த சமரச பேச்சுவார்த்தையில், வாரத்தின் முதல் 3 நாட்கள் முதல் மனைவி வீட்டிலும், அடுத்த 3 நாட்கள் 2-வது மனைவியின் வீட்டிலும், கணவர் குடித்தனம் நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், மீதமுள்ள 1 நாட்கள் மட்டும், அவருக்கு யாருடன் இருக்க விருப்பமோ, அந்த மனைவியின் வீட்டில் வசிக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்த வித்தியாசமான நடைமுறை, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News