Connect with us

Raj News Tamil

கொசு மருந்தை குடித்த 2 வயது குழந்தை உயிரிழப்பு..!!

தமிழகம்

கொசு மருந்தை குடித்த 2 வயது குழந்தை உயிரிழப்பு..!!

சென்னை அடுத்த மாதவரம் பால்பண்ணை மாத்தூர் லட்சுமி என்ற 2 வயது குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டின் சுவிட்ச் போர்டில் சொருகி வைக்கப்பட்டிருந்த கொசு மருந்து திரவத்தை (லிக்யூட்) குழந்தை லட்சுமி திடீரென எடுத்து குடித்து விட்டாள். இதில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் நந்தினி அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை லட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை லட்சுமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மாதவரம் பால்பண்ணை இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கொசுமருந்து திரவத்தை குடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top