Connect with us

Raj News Tamil

“நாங்களும் பட்டாசு வெடிக்குறோம்” – பட்டாசு தரமறுத்த இளைஞர்..! நாட்டு வெடிகுண்டு வீசி கொன்ற 4 பேர்!

தமிழகம்

“நாங்களும் பட்டாசு வெடிக்குறோம்” – பட்டாசு தரமறுத்த இளைஞர்..! நாட்டு வெடிகுண்டு வீசி கொன்ற 4 பேர்!

புதுச்சேரி அருகே, முன்பகை காரணமாக, இளைஞர் ஒருவர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜி. இவர் நேற்று மாலை, உறவினர் ஒருவரின் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அப்போது, இவருக்கும், அங்கிருந்த வாலிபர்கள் 4 பேருக்கும் இடையே, பட்டாசு வெடிப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனை காவல்நிலையம் வரை சென்ற நிலையில், காவல்துறையினர், அவர்கள் அனைவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இருப்பினும், கடும் ஆத்திரத்தில் இருந்த இளைஞர்கள், ராஜியை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.

அதன்படி, அவர் தனியாக சென்றுக் கொண்டிருந்தபோது, நாட்டு வெடிகுண்டு வீசி, படுகொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ராஜி-யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், வழக்கு பதிவு செய்து, கொலைக்கு காரணமான இளைஞர்களை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இரண்டு இளைஞர்களையும் தேடி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top