பீஹாரில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலி!

பீஹாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது.

பீஹாரில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் மதுவை விற்கவும், குடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இதுவரையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு சிவான் மற்றும் சரண் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்தவர்கள், உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். முதலில் பலி எண்ணிக்கை 6 ஆக இருந்த நிலையில், தற்போது 20-ஐ எட்டியுள்ளது. பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News