இந்தியா
2023 ஆண்டு முடிவு : வெளியான திருப்பதி தேவஸ்தான காணிக்கை வசூல்..!
உலகில் மிகவும் பணக்கார கோயில்களில் ஒன்றாக திகழ்வது, ஆந்திர மாநிலம் திருப்பதியில் அருள்பாலிக்கும் ஏழுமலையான் கோயில்.இதில், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தா்கள் இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர். ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் முடி காணிக்கை மட்டுமல்லாது தங்களது வேண்டுதல்களுக்காக பொன், பொருள் என காணிக்கை செலுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆண்டின் முடிவையொட்டி திருப்பதி தேவஸ்தானம் காணிக்கை வசூல் குறித்த தவலை இன்று வெளியிட்டுள்ளது.ஒரே ஆண்டில் ஏறக்குறைய 2.52 கோடிக்கு மேல் பக்தா்கள் வருகை தந்துள்ளதால் காணிக்கை எண்ணிக்கை ஆயிரம் கோடியை தாண்டியுள்ளதாக தொிகிறது.அதாவது, குறிப்பாக 1,398 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.