பாரிஸில் 33-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
துப்பாக்கி சுடுதலில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் மானு பாக்கர் ஏற்கெனவே பதக்க கணக்கை தொடங்கியிருந்தார்.
இந்நிலையில், துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஜோடி மனு பாகர் – சரப்ஜோத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம் ஆகும்.
மொத்தம் இரண்டு வெண்கல பதக்கத்துடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 25வது இடத்தில் உள்ளது.