இந்தியா
சாலையை கடந்த 3 யானைகள்.. வேகமாக வந்து மோதிய லாரி.. பரிதாப மரணம்..
சித்தூர் அருகே காய்கறி லோடு ஏற்றி வந்த லாரி மோதியதில், சாலையை கடந்து சென்ற 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்ததன.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பூடல்பண்டா பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில், ஒரு பெரிய யானையும், இரண்டு குட்டி யானைகளும், நடந்து சென்றன.
அப்போது, கர்நாடகாவில் இருந்து காய்கறி ஏற்றி கொண்டு வந்த லாரி, அந்த யானைகள் மீது மோதி, விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், படுகாயம் அடைந்த 3 யானைகளும், பரிதாபமாக உயிரிழந்தன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் சிவண்ணா, யானைகள் உயிரிழந்தது குறித்து, விசாரணை நடத்தி வருகிறார்.
You must be logged in to post a comment Login