தமிழகம்
வடைக்கு சட்னி தராததால் கடைக்காரருக்கு வந்த பரிதாப நிலை..!
தூத்துக்குடி மாவட்டம் சங்கர் காலனியை சேர்ந்தவர் உதயசங்கர். இவர் மதுரை புறவழிச்சாலையில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இவருடைய கடைக்கு 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். வடை வாங்கிய அவர்கள் வடைக்கு சட்னி கேட்டுள்ளனர். சட்னி இல்லை என கூறியதால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் உதயசங்கரிடம் தகராறு செய்துள்ளனர்.
பிறகு உதயசங்கரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த உதயசங்கர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login