அடுத்தடுத்து பிாிந்த 31 உயிா்கள்! மருத்துவ பற்றாக்குறைதான் காரணமா?

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் நகரில் சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 16 குழந்தைகள் உட்பட 31 பேர் 48 மணி நேரத்தில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை டீன் ஷியாம்ராவ் வாகோடெ கூறுகையில், ‘‘மரணமடைந்தவர்களில் பலர் 70-ல் இருந்து 80 வயதான முதியவர்கள். குழந்தைகள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தன. மருந்துகள், பணியாளர் தட்டுப்பாடு இல்லை. மருந்துகளை நோயாளிகளின் உடல்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதுதான் இறப்புக்குக் காரணம்’’ என்று கூறினார்.

எனினும், மருந்துகள், ஊழியர்கள் பற்றாக்குறையே உயிரிழப்புக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் , உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News