Connect with us

Raj News Tamil

32 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம்

32 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த 32 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு விமான மூலம் அனுப்பியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை பருத்தித் துறை மற்றும் யாழ்ப்பாணம் கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடலோர காவல் படையினர் கைது செய்திருந்தனர், இந்நிலையில் தீவிர விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டிருந்த நாகப்பட்டினம் 16, காரைக்கால் 14, புதுக்கோட்டை 6 மீனவர்களையும், மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 32 மீனவர்களை இன்று இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.

விடுதலை செய்யப்பட்ட அனைவரும் இன்று மதியம் இரண்டு மணிக்கு விமான மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இன்று மதியம் மூன்று முப்பது மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More in தமிழகம்

To Top