Connect with us

Raj News Tamil

கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு!

தமிழகம்

கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு!

கடலில் இறங்கிக் குளித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென்தமிழகம் மற்றும் கடலோர பகுதிகளுக்கு நேற்று (மே.5) முதல் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால் மாவட்ட நிர்வாக சார்பிலும் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், திருச்சியிலிருந்து 12 மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் நாகர்கோவிலில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்தனர். திருமண நிகழ்ச்சியை தொடர்ந்து அவர்கள் நாகர்கோவில் அருகே உள்ள லெமூரியா கடற்கரையில் குளிப்பதற்காக வந்தபோது எதிர்பாராத விதமாக கடல் அலை ஆறு பேரை இழுத்துச் சென்றது.

இதில் இரண்டு பேரை அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் உதவியுடன் உடனடியாக மீட்டனர். மீதம் உள்ள 4 பேரை கடல் அலை இழுத்து சென்றது. அவர்களை தீயணைப்பு மற்றும் மீனவர்கள் உதவியுடன் மீட்டனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top