இந்தியா
யானைகள் மிதித்து குழந்தைகள் உட்பட 4 பேர் பலி..!
அசாம் மாநிலம், கர்பி அங்கலாங் மாவட்டம் பொகஜன் பகுதியில் உள்ள வயலில் 2 பேர் வேலை செய்து வந்துள்ளனர். வேலை முடிவடைந்ததும், தங்களுடன் அழைத்து வந்த குழந்தைகளுடன் 4 பேரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அவ்வழியே வந்த இரண்டு யானைகள், அவர்களை விரட்டின. கனியா திரியா(50), ரிபிகா கெர்கேட்டா (28), ஜெசியா கெர்கேட்டா (4), மற்றும் அகஸ்டின் கர்மாகர் (2) ஆகிய நான்கு பேர் யானைகள் மிதித்ததில் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)