Connect with us

Raj News Tamil

400 பேரிடர் மீட்புக் குழு; 4,967 நிவாரண முகாம்கள்: அமைச்சர் ராமச்சந்திரன்!

தமிழகம்

400 பேரிடர் மீட்புக் குழு; 4,967 நிவாரண முகாம்கள்: அமைச்சர் ராமச்சந்திரன்!

400 பேரிடர் மீட்புக் குழு 4,967 நிவாரண முகாம்கள், 121 இடங்களில் புயல் மற்றும் பேரிடர் பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மழை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 400 பேரிடர் மீட்புக் குழு, 4,967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. கடற்கரையோர மாவட்டங்களில் 121 இடங்களில் புயல் மற்றும் பேரிடர் பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது. கனமழையால் இதுவரை பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாத நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது.

கனமழையால் ஏற்படும் எந்தவிதமான சூழ்நிலைகளையும் சமாளிக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

மக்களுக்கு முறையாக எச்சரிக்கை விடுத்த பின்னரே, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அணை நிலவரங்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளன.

சென்னையில் 169 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. 22 சுரங்கப் பாதைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வானிலை மைய அறிவிப்புகளுக்கு ஏற்றவாறு அவற்றுடன் இணைந்து மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

More in தமிழகம்

To Top