Connect with us

Raj News Tamil

உத்தராகண்ட் நிலச்சரிவில் கார் புதைந்து 5 பேர் உயிரிழப்பு!

இந்தியா

உத்தராகண்ட் நிலச்சரிவில் கார் புதைந்து 5 பேர் உயிரிழப்பு!

உத்தராகண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டம் தர்சாலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அந்த வழியாக வந்த கார் மண்ணில் புதைந்து 5 பேர் உயிரிழப்பு.

கடந்த வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அந்த வழியாக வந்த கார் மண்ணில் புதைந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில பேரிடர்மீட்புப் படையினர் நேற்று அதிகாலை மண்ணில் புதைந்தகாரை மீட்டனர். அந்தக் காரின் உள்ளே சிக்கி 5 பேர் உயிரிழந்து இருந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. காரில் இருந்தவர்கள் யார் என்பதை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

More in இந்தியா

To Top