சம்பவ இடத்தில் பிரிந்த 5 உயிர்கள்! பலி எண்னிக்கை உயருமா?

தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டா மாவட்டம் மேலச்செருவில் மை ஹோம் நிறுவனத்தின் சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது. இத்தொழிற்சாலையில்,4 வது யூனிட் அமைக்கும் பணிகள் தொடர்ந்து வருகிறது. 500 அடி உயரத்தில் கான்கிரீட் வேலை செய்து கொண்டிருந்த போது லிப்ட் திடீரென அறுந்து கீழே விழுந்தது.

இதில் பணியில் இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக சூர்யா பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக
கூறப்படுகிறது. இறந்தவர்கள் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News