Connect with us

Raj News Tamil

இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

இந்தியா

இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் ஊடுருவதாக குப்வாரா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில், குப்வாரா மாவட்டத்தின் மச்சில் செக்டார் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தீவிரவாதிகள் இந்திய எல்லைக்கு ஊடுருவ முயற்சிப்பதை கண்ட ராணுவ வீரர்கள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை கூடுதல் இயக்குநர் விஜய்குமார் தெரிவித்தார்.

எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் தனது பதிவில், “கொல்லப்பட்ட தீவிரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அங்கு தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடர்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

More in இந்தியா

To Top