தமிழகம்
5 வயது சிறுமியை சீரழித்த திமுக கவுன்சிலர்!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் நர்சரி பள்ளியை நடத்தி வருபவர் பக்கிரிசாமி. இவர், விருத்தாசலம் நகராட்சியின் 30-வது வார்டு திமுக கவுன்சிலராகவும் இருந்து வந்தார். இந்நிலையில், இவரது பள்ளியில் படிக்கும் 5-வயது சிறுமி, பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு, வயிறு வலியால் துடித்த அந்த சிறுமியை பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்ததில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பெற்றோர் சார்பில் காவல்துறையில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். அதில், பக்கிரிசாமி தான் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இதனிடையே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பக்கிரிசாமியை திமுகவில் இருந்து நீக்கி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
You must be logged in to post a comment Login