தமிழகம்
இனி இந்த பூச்சிக்கொல்லிகளுக்கு நிரந்தர தடை – தமிழக அரசு அதிரடி
தற்கொலைக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில், அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளை நிரந்தரமாகத் தடை செய்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 60 நாட்களுக்குத் தடை செய்து அரசாணையைப் பிறப்பித்த நிலையில் தற்போது தமிழக அரசு நிரந்தமாகத் தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மோனோகுரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ், அசிபேட், ப்ரோஃபெனோபாஸ் சைபர்மெத்ரின், குளோர்பைரிஃபோஸ் சைபர்மெத்ரின், குளோர்பைரிபாஸ் உள்ளிட்ட ஆறு பூச்சி கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிக நச்சுத்தன்மை கொண்டவை.
You must be logged in to post a comment Login