இந்தியா
6 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை!10 ஆண்டுகள்சிறை தண்டனையில் சிக்கிய கொடூர தந்தை !
மகாராஷ்டிராவில் தனது 6 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 10 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கல்வாவை சேர்ந்த 31 வயதுடைய வாலிபர் ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 2-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த தனது 6 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்தள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் பாதிப்புக்குள்ளான சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றை கூறியுள்ளாா். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர். இவர் மீது சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணையில் அவருக்கு எதிராக 5 பேர் சாட்சியம் அளித்தனர். இதில் குற்றம் நிரூபணமான நிலையில் அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தேஷ்முக் உத்தரவிட்டுள்ளாா்