இந்தியா
சிக்கிம் எல்லையில் பனிச்சரிவு – 7 பேர் பலி…150 பேரை தேடும் மீட்புப்படை
இந்தியா – சீனா எல்லை பகுதியில் சிக்கிம் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதி நாதுலா. இப்பகுதியில் இன்று நண்பகல் சுமார் 12.15 மணியளவில் மிகப்பெரிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 7 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இந்த பனிச்சரிவில் 150க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பேரிடர் மீட்புப் படையினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login