போலீஸ் விசாரணை.. பயந்து மகனுடன் பதுங்கிய தந்தை.. மின்சாரம் தாக்கி சிறுவன் பலி..

தண்டலம் அருகே, காவல்துறையின் விசாரணைக்கு பயந்து தந்தையுடன் ஒலிந்த சிறுவன், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

ராணிப்பேட்டை மாவட்டம் தண்டலம் அருகே உள்ள ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் துளசி. இவருக்கு, சங்கீதா என்ற மனைவியும், மணிகண்டன் என்ற 8 வயது மகனும் உள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று, தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக, துளசிக்கும், சங்கீதாவிற்கும், தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு, கைகலப்பாக மாறிய நிலையில், சங்கீதா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், துளசியிடம் விசாரணை நடத்துவதற்கு, வீட்டிற்கு வந்துள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், தனது மகன் மணிகண்டனை அழைத்துக் கொண்டு, உறவினர் வீட்டில் பதுங்கியுள்ளார்.

அப்போது, அங்கு அறுந்து கிடந்த ஒயரை சிறுவன் தொட்டதால், மின்சாரம் தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சிறுவன், மருத்துவமனைக்கு சிகிச்சை அழைத்து செல்லப்பட்டான்.

ஆனால், பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News