உலகம்
பாலியல் தொல்லை கொடுத்ததாக ட்ரம்ப் மீது 81 வயது மூதாட்டி புகார்..!
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்ப் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பதவியை விட்டு விலகிய போதும் சர்ச்சைகள் அவரை விடாமல் துரத்தி வருகின்றன. ட்ரம்ப் மீது பல பெண்கள் பாலியல் புகார்களை தந்துள்ளனர்.
சமீபத்தில் ஆபாச பட நடிகை ஸ்டாரமி டேனியல்ஸ் ட்ரம்ப் மீது பாலியல் புகார்களை முன்வைத்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு பாலியல் புகார் எழுந்துள்ளது.
ஜெஸ்சிக்கா லீட்ஸ் என்ற பெண் 1978இல் விமானப் பயணம் மேற்கொண்ட போது அதில் ட்ரம்ப் சக பயணியாக வந்ததாகவும், அப்போது எதிர்பாராத விதமாக தனக்கு முத்தம் கொடுக்க முயற்சித்தும், மார்பகங்களை சீண்டியும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஜெசிக்கா புகாரில் தெரிவித்துள்ளார்.
புகார் கொடுத்த ஜெசிக்காவுக்கு தற்போது வயது 81 ஆகிறது. தற்போது அடுத்த தேர்தல் விரைவில் வரப்போகும் நிலையில், ட்ரம்பை சுற்றி புதிய சர்ச்சைகள் கிளம்பத் தொடங்கியுள்ளது.
You must be logged in to post a comment Login